செய்திகள்
மரணம்

அய்யம்பேட்டை அருகே சேலையில் தீப்பிடித்து பெண் பலி

Published On 2021-01-23 10:54 GMT   |   Update On 2021-01-23 10:54 GMT
அய்யம்பேட்டை அருகே சேலையில் தீப்பிடித்து பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அய்யம்பேட்டை:

அய்யம்பேட்டை அருகே சக்கராப்பள்ளி கீழத்தெரு ஜெயினுலாபுதீன் நகரைச் சேர்ந்தவர் பசீர் அகமது. இவரது மனைவி நபிசத்துல் முஸ்ரியா (வயது 33). சம்பவத்தன்று இவர் தனது வீட்டில் உள்ள கியாஸ் அடுப்பில் டீ போட்டுக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக பரணில் இருந்த மண்எண்ணெய் கேன் அடுப்பின் மேல் விழுந்தது. இதில் தீ மளமளவென பரவி நபிசத்துல் முஸ்ரியா சேலையில் பிடித்தது. இதில் படுகாயமடைந்த அவரை உடனடியாக சிகிச்சைக்காக தஞ்சை தனியார் மருத்துமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நபிசத்துல்முஸ்ரியா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் அய்யம்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் கரிகால்சோழன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முருகதாஸ் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News