செய்திகள்
பணம் கொள்ளை

விழுப்புரத்தில் அரசு ஆஸ்பத்திரி நர்ஸ் வீட்டில் பணம் கொள்ளை

Published On 2021-01-23 09:08 GMT   |   Update On 2021-01-23 09:08 GMT
விழுப்புரத்தில் அரசு ஆஸ்பத்திரி நர்ஸ் வீட்டில் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம்:

விழுப்புரம் முத்தம்பாளையம் வாஞ்சிநாதன் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தசாமி (வயது 60). அவரது மனைவி புவனேஷ்வரி (57).  அரசு நர்ஸ். இவர் தோகை பாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நர்ஸ்சாக பணியாற்றி வருகிறார்.

சம்பவத்தன்று புவனேஷ்வரி வீட்டை பூட்டிவிட்டு, திருப்பூரில் உள்ள மகளை பார்க்க சென்றார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் பீரோவை திறந்து அதில் இருந்த பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.

கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்ட அப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுதொடர்பாக அதேபகுதியில் வசித்து வரும் புவனேஷ்வரியின் மகன் சிவக்குமாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அவர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது ரூ.4 லட்சம் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதுகுறித்து விழுப்புரம் தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News