செய்திகள்
கோப்புபடம்

நன்னிலத்தில் மோட்டார் சைக்கிளில் சாராயம் கடத்திய வாலிபர் கைது

Published On 2021-01-22 10:31 GMT   |   Update On 2021-01-22 10:31 GMT
நன்னிலம் அருகே மோட்டார்சைக்கிளில் சாராயம் கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நன்னிலம்:

நன்னிலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகுணா மற்றும் போலீசார் நன்னிலம் அருகே திருவாரூர்-மயிலாடுதுறை சாலையில் மகிழஞ்சேரி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் நோக்கி வந்த ஒரு மோட்டார் சைக்கிளை மறித்து சோதனை செய்தபோது அதில் லாரி டியூபில் 110 லிட்டர் புதுச்சேரி சாராயம் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. 

இதையடுத்து அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் காரைக்கால் அருகே உள்ள விழிதியூர் பகுதியை சேர்ந்த முரளி (வயது25) என்பது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து, சாராயம் மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News