செய்திகள்
ஸ்டெர்லைட் வழக்கு- தமிழக அரசின் புதிய மனுவை ஏற்றது உச்ச நீதிமன்றம்
ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் தமிழக அரசு தாக்கல் செய்த புதிய மனுவை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது.
புதுடெல்லி:
ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தமிழக அரசை விமர்சித்த சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின் கருத்துக்களை நீக்கக்கோரி தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது. ஸ்டெர்லைட் தொடர்பான பிரதான வழக்குடன் சேர்த்து தமிழக அரசின் மனு விசாரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, இடைக்கால பராமரிப்பு பணிக்காக ஆலையை திறக்க அனுமதிக்க வேண்டும் என ஸ்டெர்லைட் தரப்பில் ஒரு மனு அளிக்கப்பட்டது. ஆனால், ஸ்டெர்லைட் நிறுவனத்தின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.