செய்திகள்
கடத்தூரில் கரும்பு வியாபாரி கொலை வழக்கில் மேலும் 3 பேர் கைது
கடத்தூரில் கரும்பு வியாபாரி கொலை வழக்கில் மேலும் 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடத்தூர்:
கடத்தூர் அருகே உள்ள அஸ்தகிரியூர் கோம்பை பகுதியை சேர்ந்தவர் லோகிதாசன் என்கிற முனியப்பன். கரும்பு வியாபாரி. இவர் காரில் கடத்தி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக ரகுபதி (வயது37) விவேகானந்தன் (32), ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் தலைமறைவாக இருந்த ரகு (30), முருகன் (30), விஜியன் (28) ஆகிய 3 பேரை கடத்தூர் போலீசார் கைது செய்து அரூர்சிறையில் அடைத்தனர்.