செய்திகள்
முக ஸ்டாலின்

7 பேரை உடனே விடுவிக்க வேண்டும் – திமுக மாவட்ட செயலாளர் கூட்டத்தில் தீர்மானம்

Published On 2021-01-21 14:25 GMT   |   Update On 2021-01-21 14:25 GMT
சென்னையில் திமுக தலைவர் முக ஸ்டாலின் தலைமையிலான மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
சென்னை:

சென்னையில் திமுக தலைவர் முக ஸ்டாலின் தலைமையிலான மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளது. 

*பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் உடனே விடுவிக்க ஆளுநர் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

*புதிய 3 வேளாண் சட்டங்களையும், மத்திய பாஜக அரசு நிபந்தனையின்றி உடனே திரும்பப்பெற வேண்டும். 

*மார்கழி மழையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உடனே நிவாரணம் வழங்க வலியுறுத்தி தீர்மானம். 

*இந்தியாவில் வேறெங்கும் காண முடியாத அளவுக்கு அதிமுக ஆட்சியில் ஊழல் செய்துள்ளதாக திமுக கண்டனம் தீர்மானம் நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

*பொள்ளாச்சியில் பாலியல் வழக்கில் முக்கிய குற்றவாளிகளை மேலும் தாமதமின்றி கைது செய்ய வேண்டும். 

மேலும், திமுக தலைவர் முக ஸ்டாலினை முதல்வராக்கிட மாவட்ட செயலாளர் கூட்டம் உறுதியேற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News