செய்திகள்
கொலை

மதுரையில் ஆட்டோ டிரைவர் இறப்பில் புதிய திருப்பம்- கள்ளக்காதல் விவகாரத்தில் கொலையுண்டது அம்பலம்

Published On 2021-01-21 07:12 GMT   |   Update On 2021-01-21 07:12 GMT
மதுரையில் பிணமாக கிடந்த ஆட்டோ டிரைவர் சாவில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. அவர் கள்ளக்காதல் விவகாரத்தில் கொலையுண்டது அம்பலமாகி உள்ளது.

மதுரை:

மதுலை சோலையழகுபுரம் திருப்பதி நகர் 2-வது தெருவைச் சேர்ந்தவர் காதர் மஸ்தான் (வயது 30), ஆட்டோ டிரைவர். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இவருக்கு குடிபழக்கம் இருந்தது.

நேற்று முன்தினம் குடிபோதையில் வீட்டில் உள்ளவர்களிடம் தகராறில் ஈடுபட்டார். பின்னர் அவர் வீட்டை விட்டு வெளியே சென்றார். அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் ஜெய்ஹிந்துபுரம் போலீசில் புகார் கொடுத்தனர். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் ஜீவா நகர் 2-வது தெருவில் காதர் மஸ்தான் பிணமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதில் காதர் மஸ்தானின் மர்ம உறுப்பு அறுக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. மேலும் அவரது காதிலும் காயங்கள் இருந்தன. இதனால் அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர்.

இதுதொடர்பாக போலீசார் அவரது மனைவி ரசூல் பாத்திமா மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடத்தினார்கள்.

அப்போது மனைவி கூறும்போது, என் கணவருக்கு குடி பழக்கம் உண்டு. தினமும் என்னிடம் குடித்து விட்டு தகராறு செய்து வந்தார். இதை எனது உறவினர்கள் தட்டிக்கேட்டனர். இதனால் அவர்களுடன் பகையை சம்பாதித்து வந்தார்.

நேற்று முன்தினம் எனக்கும், அவருக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டது. இதில் கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்றார். நாங்கள் அவரை நள்ளிரவு வரை தேடி பார்த்தோம். மறுநாள் தான் அவர் பிணமாக கிடப்பது தெரிந்தது என்று தெரிவித்தார்.

இதன்பேரில் போலீசார் காதர் மஸ்தானின் உறவினர்களிடம் விசாரணை நடத்தினார்கள். மேலும் அவரது நெருங்கிய நண்பர்களிடமும் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் காதர் மஸ்தானுக்கும், சோலையழகுபுரத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் இடையே கள்ள தொடர்பு இருந்து வந்தது தெரியவந்தது.

அந்த பெண் வீட்டுக்கு காதர் மஸ்தான் அடிக்கடி சென்று வருவதுண்டாம். ஜெய்ஹிந்துபுரம் பகுதியில் ஒன்றாக சுற்றி திரிந்ததை அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் பார்த்துள்ளனர். இதன் காரணமாக காதர் மஸ்தான் கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அவரது கள்ளக்காதலியிடமும் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். விசாரணையில் தான் கள்ளக்காதலி இந்த கொலையில் ஈடுபட்டாரா? என தெரிய வரும்.

சம்பவம் நடந்த நேற்று முன்தினம் இரவு காதர் மஸ்தான் சென்ற ஆட்டோ விபத்தில் சிக்கியது. இதில் அவரது ஆட்டோவுக்கு அதிக சேதம் ஏற்பட்டது. இதையடுத்து எதிர்தரப்பிடம் பேச்சுவார்த்தை நடத்தி ஆட்டோ சேதத்தை சரி செய்ய அவர்களிடம் காதர் மஸ்தான் பணம் பெற்றதாக கூறப்படுகிறது.

ஆட்டோ விபத்தில் சிக்கி சேதமடைந்ததால் மனவேதனையில் இருந்த காதர் மஸ்தான் அன்று இரவு அளவுக்கு அதிகமாக மது குடித்ததாக கூறப்படுகிறது. மேலும் வீட்டிற்கு சென்று குடும்பத்தினரிடம் தகராறில் ஈடுபட்டார். அதன் பிறகு தான் அவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இதனால் அவர் எப்படி கொலை செய்யப்பட்டார்? என்ன காரணத்திற்காக இந்த கொலை நடந்தது என்ற முழுமையான விவரம் தெரியவில்லை. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என தெரிகிறது.

மதுரையில் ஆட்டோ டிரைவரை கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News