செய்திகள்
திருமங்கலம் அருகே கோவில் உண்டியலை உடைத்து திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமங்கலம்:
திருமங்கலம் கூடக்கோவில் அருகே தெக்கூர் கிராமத்தில் உள்ள காளியம்மன் கோவிலில் நேற்று முன் தினம் இரவு வரை நடை திறக்கப்பட்டு இருந்தது. பின்னர் பூஜை முடிந்து கோவிலை பூட்டி விட்டு பூசாரி சென்று விட்டார். இந்த நிலையில் நள்ளிரவில் கோவிலுக்குள் புகுந்த மர்ம நபர்கள் உண்டியலை உடைத்து அதில் இருந்த பணம் மற்றும் 15 கோவில் மணிகள் உள்ளிட்ட பொருட்களை திருடிச் சென்று விட்டனர். இது குறித்து கோவில் பூசாரி ஆதிமூலம் கூடக்கோவில் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.