செய்திகள்
பாப்பிரெட்டிப்பட்டி அருகே முதியவர் தற்கொலை
பாப்பிரெட்டிப்பட்டி அருகே விஷம் குடித்து முதியவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொம்மிடி:
பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள மாரியம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் குழந்தை (வயது 62). விவசாயி. நேற்று முன்தினம் குடும்பத்தினருடன் ஏற்பட்ட தகராறில் கோபித்துக்கொண்டு அருகே உள்ள மெனசி மலைஉச்சிக்குச் சென்று விஷம் குடித்து தற்கொலை செய்தார். இதுகுறித்து பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.