செய்திகள்
மரணம்

ஏற்காட்டிற்கு வந்த தெலுங்கானா வாலிபர் திடீர் மரணம்

Published On 2021-01-20 07:14 GMT   |   Update On 2021-01-20 07:14 GMT
ஏற்காட்டிற்கு வந்த தெலுங்கானா வாலிபர் திடீர் மரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம்:

தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்தவர் ராம்சந்த் கவுடா (வயது 30). இவருடன் ஒரே கல்லூரியில் படித்த 30 பேர் சேலம் மாவட்டம் ஏற்காட்டிற்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு சுற்றுலா வந்தனர். அவர்கள் அங்குள்ள பல்வேறு பகுதிகளை கடந்த 2 நாட்களாக சுற்றி பார்த்தனர்.

பின்னர் நேற்றிரவு அங்கு அறை எடுத்து தங்கினர். இன்று அதிகாலை 3 மணியளவில் திடீரென ராம்சந்த் கவுடாவுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு மயங்கி விழுந்தார். இதையடுத்து ஏற்காடு அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.

அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால் வரும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். அவரது உடல் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து உறவினர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து ஏற்காடு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News