செய்திகள்
திருக்காட்டுப்பள்ளி அருகே இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
திருக்காட்டுப்பள்ளி அருகே இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருக்காட்டுப்பள்ளி:
மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பூதலூர் ஒன்றிய இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் பூதலூர் தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு பூதலூர் ஒன்றிய இந்திய கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் செந்தில்குமார், துரைராஜ், முகில், துரைசாமி, கண்ணகி, கணபதிசுந்தரம், நாகராஜ், கவுன்சிலர் லதா மற்றும் பலர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் தாசில்தார் அருணகிரி உள்ளிட்ட வருவாய்த்துறை மற்றும் வேளாண்துறை அதிகாரிகள் மனுவை பெற்றுக்கொண்டு, உரிய கணக்கீடு செய்து நிவாரணம் அளிக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உறுதியளித்தனர்.