செய்திகள்
கோப்புபடம்

வையம்பட்டி அருகே மோட்டார் சைக்கிள் மோதி பாதயாத்திரை சென்ற பக்தர் பலி

Published On 2021-01-19 12:01 GMT   |   Update On 2021-01-19 12:01 GMT
வையம்பட்டி அருகே மோட்டார் சைக்கிள் மோதி பாதயாத்திரை சென்ற பக்தர் பலியானார்.
வையம்பட்டி:

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் அருகே உள்ள மேலபுதுவயல் பகுதியைச் சேர்ந்த சுமார் 25 பேர் பழனி முருகனுக்கு மாலையிட்டு விரதமிருந்து பாதயாத்திரையாக பழனி நோக்கி புறப்பட்டுச் சென்று கொண்டிருந்தனர். அதில் அதே பகுதியைச் சேர்ந்த நாகராஜன் (வயது 24) என்பவரும் சென்று கொண்டிருந்தார். நேற்று அதிகாலை திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வையம்பட்டி அருகே ஆசாத்ரோடு என்ற இடத்தில் திருச்சி திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் பாதயாத்திரை குழுவினர் சென்று கொண்டிருந்த போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த பன்னபட்டியைச் சேர்ந்த ஆரோக்கியம் (36) ஓட்டிவந்த மோட்டார் சைக்கிள் நாகராஜன் மீது மோதியது. 

இதில் இருவரும் படுகாயமடைந்த நிலையில் இருவரையும் மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு நாகராஜன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து வையம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News