செய்திகள்
கோப்புபடம்

பாடாலூர் அருகே வாகனம் மோதி பெண் பலி

Published On 2021-01-19 11:05 GMT   |   Update On 2021-01-19 11:05 GMT
பாடாலூர் அருகே வாகனம் மோதி பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாடாலூர்:

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா இரூர் கிராமத்தை சேர்ந்தவர் அமுதா(வயது 45). இவர் நேற்று அதிகாலை தனது வயலுக்கு ெசன்றபோது திருச்சி -சென்னை தேசிய நெடுஞ்சாலை வழியாக வந்த வாகனம், அவர் மீது மோதியது. 

இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுபற்றி தகவல் அறிந்த ரோந்து போலீசார் அங்கு சென்று, அமுதாவின் உடலை ைகப்பற்றி பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News