செய்திகள்
கோப்புபடம்

கரூர் அருகே கஞ்சா விற்ற வாலிபர் கைது

Published On 2021-01-19 10:41 GMT   |   Update On 2021-01-19 10:41 GMT
கரூர் அருகே கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கரூர்:

கரூர் வெங்கமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் மாரிமுத்து தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வெங்கமேடு வி.வி.ஜி. நகர் பகுதியில் கஞ்சா வைத்து விற்பனை செய்து கொண்டிருந்த நரி என்கிற கவுதம் (வயது 21) என்பவரை போலீசார் கைது செய்தனர். 

மேலும் அவரிடமிருந்த கஞ்சா பொட்டலங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் தப்பியோடிய அலெக்ஸ் என்பவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News