செய்திகள்
விபத்து பலி

நெல்லை அருகே வாகனம் மோதி வாலிபர் பலி

Published On 2021-01-19 08:30 GMT   |   Update On 2021-01-19 08:30 GMT
நெல்லை அருகே வாகனம் மோதி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை:

நெல்லை பழைய பேட்டையைச் சேர்ந்தவர் முகமது ஷேக். இவருடைய மகன் சதாம் உசேன் (வயது 33). இவரும், இவருடைய சகோதரர் சாகுல் அமீது என்பவரும் சம்பவத்தன்று இரவில் மோட்டார் சைக்கிளில் பழைய பேட்டை அருகே உள்ள கண்டியபேரி ரோட்டில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த வாகனம் இவர்கள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்த சதாம் உசேன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். படுகாயமடைந்த சாகுல் அமீது பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுகுறித்து நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News