செய்திகள்
யானைகள்

காட்டு யானைகள் அட்டகாசம்

Published On 2021-01-19 08:19 GMT   |   Update On 2021-01-19 08:19 GMT
யானைகள் அட்டகாசத்தை கட்டுப்படுத்த வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புளியங்குடி:

புளியங்குடி பேச்சியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கலையரசன். இவருக்கு சொந்தமான விவசாய நிலமானது காடுவெட்டி பகுதியில் உள்ளது. அந்த இடத்தில் அவர் நெல் பயிரிட்டு இருக்கிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் சுமார் 10-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் நெல் வயலுக்குள் புகுந்து, பயிர்களை சேதப்படுத்தியது. இப்பகுதியில் யானைகள் அட்டகாசத்தை கட்டுப்படுத்த வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News