செய்திகள்
திருக்கோவிலூர் அருகே ஆசிரியை தூக்குப்போட்டு தற்கொலை
திருக்கோவிலூர் அருகே ஆசிரியை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருக்கோவிலூர்:
திருக்கோவிலூர் அருகே உள்ள அருதங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் பாலமுருகன். இவரது மனைவி சகுந்தலா(வயது 33). தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்த இவர் சம்பவத்தன்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றிய தகவல் அறிந்த திருப்பாலபந்தல் போலீசார் விரைந்து வந்து தூக்கில் தொங்கிய சகுந்தலாவின் உடலை இறக்கி பிரேத பரிசோதனைக்காக திருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சகுந்தலாவின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.