செய்திகள்
கைது

திருப்பூர் அருகே அனுமதியின்றி மதுவிற்ற 6 பேர் கைது

Published On 2021-01-18 18:21 GMT   |   Update On 2021-01-18 18:21 GMT
திருப்பூர் அருகே அனுமதியின்றி மது விற்பனை செய்த 6 பேரை போலீசார் கைது செய்தனர்
வீரபாண்டி:

திருப்பூர் வீரபாண்டி போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட இடுவம்பாளையம் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வீரபாண்டி போலீசார், இடுவம்பாளையம் அண்ணாநகர் பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது திருப்பூர் இடுவம்பாளையம் அண்ணா நகரைச் சேர்ந்த சண்முகம் (வயது 44) என்பவர் மதுபாட்டில்கள் வைத்திருந்தது தெரியவந்தது. அவரிடமிருந்து 15 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்ததோடு, அவரையும் கைது செய்தனர்.

இதேபோல் சுண்டமேடுபகுதியைச் சேர்ந்த அன்புச்செல்வன் (21) என்பவரிடம் 7 மது பாட்டில்களும், பலவஞ்சிபாளையம் பகுதியைச்சேர்ந்த மூர்த்தி (39) என்பவரிடமும் 13 மதுபாட்டில்களையும், முருகம்பாளையம் பகுதியைச் சேர்ந்த தாமரைக்கண்ணன் (27) என்பவரிடமிருந்து 10 மதுபாட்டில்களையும் அதே பகுதியைச் சேர்ந்த பிரவீன் குமார் (31), அன்பரசன் (32) என்பவரிடமிருந்து 12 மதுபாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்ததோடு அவர்கள் 6 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.
Tags:    

Similar News