செய்திகள்
கோப்பு படம்.

திருப்பூர் மாவட்டத்தில் மேலும் 20 பேருக்கு கொரோனா

Published On 2021-01-18 14:34 GMT   |   Update On 2021-01-18 14:34 GMT
திருப்பூர் மாவட்டத்தில் மேலும் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மொத்த எண்ணிக்கை 17 ஆயிரத்து 542 ஆக உயர்ந்துள்ளது.
திருப்பூர்:

திருப்பூர் மாவட்டத்தில் நேற்று 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்கள் திருப்பூர் மற்றும் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தற்போது திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 17 ஆயிரத்து 542 ஆக உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் பலி எண்ணிக்கை 220 ஆக உள்ளது.

நேற்று ஒரே நாளில் 26 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 213 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுவரை மாவட்டம் முழுவதும் 17 ஆயிரத்து 109 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
Tags:    

Similar News