செய்திகள்
தூத்துக்குடியில் மதுவிற்ற 104 பேர் கைது
தூத்துக்குடி மாவட்டத்தில் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு மது விற்பனையில் ஈடுபட்ட 104 பேரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு மதுபான கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டது. ஒரு சிலர் சட்டவிரோதமாக மது விற்பனை செய்து வந்தனர். இதை தடுக்கும் பொருட்டு மது விற்பனையை கண்காணிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவிட்டார். அதன்படி மாவட்டத்தில் திருவள்ளுவர் தினத்தில் மது விற்றதாக ஒரே நாளில் 98 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. மேலும் மதுபாட்டில் விற்பனை செய்த 104 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 785 மதுபாட்டில்களும், ரூ.99 ஆயிரத்து 420-ம் பறிமுதல் செய்யப்பட்டது.