செய்திகள்
பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன்

பள்ளிகள் நாளை திறப்பு- பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் ஆய்வு

Published On 2021-01-18 04:35 GMT   |   Update On 2021-01-18 04:35 GMT
சென்னை ஷெனாய் நகரில் உள்ள திருவிக மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் ஆய்வு மேற்கொண்டார்.
சென்னை:

கொரோனா தொற்றால் பள்ளிகள் கடந்த 9 மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டு இருக்கின்றன.

இந்த நிலையில் 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெற இருப்பதை கருத்தில் கொண்டு அவர்களுக்கு மட்டும் பள்ளிகளை திறப்பது பற்றி கல்வித்துறை ஆலோசித்து வந்தது.

இதைத்தொடர்ந்து கடந்த 6, 7 மற்றும் 8-ந் தேதிகளில் 10, 12-ம் வகுப்பு மாணவர்களின் பெற்றோரிடம் பள்ளிகள் திறப்பு குறித்து கருத்துகள் கேட்கப்பட்டன. அவர்கள் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையிலேயே பள்ளிகள் திறக்கப்படும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

பெரும்பாலான பெற்றோர் பள்ளிகளை திறக்க ஆதரவு தெரிவித்து கூறியிருந்த கருத்துகளின்படி நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் பள்ளிகள் திறக்க முடிவு செய்து ஏற்கனவே அறிவிப்பு வெளியிடப்பட்டது.

பள்ளிகள் திறக்கப்படும் போது மேற்கொள்ளப்பட வேண்டிய முன்எச்சரிக்கை நடவடிக்கைகள், முன்னேற்பாடுகள் குறித்தும் அரசு வழிகாட்டு நெறிமுறைகளாகவும் வெளியிட்டது.

அந்த வகையில் பள்ளிக்கு மாணவர்கள் வருகையை கட்டாயப்படுத்த கூடாது. விருப்பத்தின் பேரில் பெற்றோரின் இசைவு கடிதம் பெற்று மாணவர்கள் பள்ளிக்கு வர அனுமதிக்க வேண்டும் என்பது போன்ற பல்வேறு நெறிமுறைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

அதேபோல், பள்ளி வளாகங்கள், வகுப்பறைகள் ஆகியவற்றை எவ்வாறு சுத்தமாக வைத்திருக்க வேண்டும்? என்பது போன்ற வழிகாட்டு நெறிமுறைகளையும் அரசு தெரிவித்து இருந்தது. இதை கண்காணிக்க கல்வித்துறை அதிகாரிகள் அந்தந்த மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் இன்று ஆய்வு செய்கின்றனர்.

இந்நிலையில் சென்னை ஷெனாய் நகரில் உள்ள திருவிக மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

* மாணவர்கள் முகக்கவசம் அணிந்து பள்ளிக்கு வருவது கட்டாயம்.

* உடல்வெப்ப பரிசோதனைக்கு பிறகே வகுப்புகளில் மாணவர்கள் அனுமதிக்கப்படுவர்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News