செய்திகள்
தமிழகத்தில் வறண்ட வானிலையே நிலவும்- வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை:
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தெற்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி குமரிக்கடல் பகுதிவரை நீடிப்பதால் தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் தென்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
18.01.2021, 19.01.2021 மற்றும் 20.01.2021 ஆகிய தேதிகளில் தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப்பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடனுடம், காலை நேரங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30, குறைந்தபட்ச வெப்பநிலை 21 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும்.
தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக புதுக்கோட்டை, கன்னியாகுமரி, இளையான்குடி, அம்பாசமுத்திரம், மானாமதுரை, மணமேல்குடியில் தலா 2 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.
வடகிழக்கு பருவமழையானது தென்மாநிலங்களில் இருந்து வருகின்ற 19-ந்தேதி விலகுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தெற்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி குமரிக்கடல் பகுதிவரை நீடிப்பதால் தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் தென்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
18.01.2021, 19.01.2021 மற்றும் 20.01.2021 ஆகிய தேதிகளில் தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப்பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடனுடம், காலை நேரங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30, குறைந்தபட்ச வெப்பநிலை 21 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும்.
தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக புதுக்கோட்டை, கன்னியாகுமரி, இளையான்குடி, அம்பாசமுத்திரம், மானாமதுரை, மணமேல்குடியில் தலா 2 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.
வடகிழக்கு பருவமழையானது தென்மாநிலங்களில் இருந்து வருகின்ற 19-ந்தேதி விலகுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.