செய்திகள்
கொள்ளை

ஜெபக்கூட்டத்திற்கு சென்ற போது தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் 20 பவுன் நகை திருட்டு

Published On 2021-01-17 06:54 GMT   |   Update On 2021-01-17 06:54 GMT
சுரண்டை அருகே ஜெபக்கூட்டத்திற்கு சென்ற போது தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் 20 பவுன் நகை திருட்டு போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சுரண்டை:

தென்காசி மாவட்டம் சுரண்டையை அடுத்த கீழச்சுரண்டை வேதக்கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெபமணி பாலச்சந்திரன். இவர் அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

இவருக்கு அம்சுமணி (வயது60) என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். மகளுக்கு திருமணம் ஆகி வெளியூரில் வசித்து வருகிறார். அவருடைய நகைகள் ஜெபமணி வீட்டில் இருந்தது.

நேற்று கீழச்சுரண்டையில் நடைபெற்ற ஜெபக்கூட்டத்திற்கு கணவன்-மனைவி இருவரும் சென்றுள்ளனர்.

கூட்டம் முடிந்து வீட்டிற்கு வந்து பார்த்த போது கதவுகள் திறந்திருந்தன. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் வீட்டிற்கு சென்று பார்த்த போது பீரோவின் கதவுகள் உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த தங்க செயின், கம்மல்கள் திருட்டு போய் இருந்தது.

உடனடியாக சுரண்டை போலீசில் ஜெபமணி புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

இது தொடர்பாக அதே தெருவில் வசிக்கும் ஒருவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். திருட்டு போன 20 பவுன் செயின் மதிப்பு ரூ.7 லட்சம் ஆகும்.
Tags:    

Similar News