செய்திகள்
தண்டவாளத்தில் தலை வைத்து விவசாயி தற்கொலை
திருமங்கலம் அருகே தண்டவாளத்தில் தலை வைத்து விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணைநடத்தி வருகின்றனர்.
திருமங்கலம்:
மதுரை மாவட்டம் திருமங்கலம், குண்டாறு 6 கண் பாலம் அருகில் உள்ள தண்டவாளத்தில் இன்று காலை 55 வயது மதிக்கத்தக்க நபர் ரெயில் மோதி பிணமாக கிடந்தார். தண்டவாளத்தில் தலை வைத்து படுத்ததில் செங்கோட்டையில் இருந்து மதுரை வந்த ரெயில் மோதி அவரது தலை துண்டானது. அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை. பச்சை கலர் பெல்ட்டும், கறுப்பு சட்டையும், வேட்டியும் அணிந்திருந்தார்.
விருதுநகரில் இருந்து திருமங்கலத்துக்கு பஸ்சில் பயணம் செய்ததற்கான டிக்கெட் அவரது பையில் இருந்தது. தலைபாகை அணிந்திருந்தார். அவர் விவசாயியாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதுகுறித்து விருதுநகர் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.