செய்திகள்
தற்கொலை

தேனி அருகே தூக்குப்போட்டு பெண் தற்கொலை

Published On 2021-01-16 14:42 GMT   |   Update On 2021-01-16 14:42 GMT
தேனி அருகே தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேனி:

தேனி பங்களாமேடு பகுதியை சேர்ந்தவர் வீரஅழகு. இவருடைய மனைவி கீர்த்தனா (வயது 24). இவர்களுக்கு திருமணமாகி 1 வயதில் அஸ்வந்த் என்ற குழந்தை உள்ளது. வீரஅழகு கடந்த சில மாதங்களாகவே செல்போனில் யாரிடமோ அடிக்கடி பேசி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் சந்தேகம் அடைந்த கீர்த்தனா, தனது கணவரிடம் விசாரித்தார். அப்போது கணவன்-மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட கீர்த்தனா, நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தேனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கீர்த்தனாவுக்கு திருமணமாகி 2 ஆண்டுகளே ஆவதால் பெரியகுளம் ஆர்.டி.ஓ. சினேகாவும் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News