செய்திகள்
கைது

ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வந்த 2 பேர் கைது

Published On 2021-01-16 09:58 GMT   |   Update On 2021-01-16 09:58 GMT
ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வந்த 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கும்மிடிப்பூண்டி:

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பைபாஸ் சாலையான சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் நேற்று சப்- இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமையில் கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக ஒரு மூட்டையுடன் இறங்கி ரோட்டில் நடந்து வந்து கொண்டிருந்த சந்தேகத்திற்குரிய 2 பேரை போலீசார் மடக்கி நிறுத்தி சோதனை செய்தனர்.

அப்போது, அவர்கள் வைத்திருந்த மூட்டையில் 21 கிலோ கஞ்சா இருப்பதும், அதனை ஆந்திராவில் இருந்து அவர்கள் கடத்தி வந்ததும் தெரியவந்தது.

இதுகுறித்து கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த செல்வராஜ் (வயது 58), ஒச்சப்பதேவர் (66) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.
Tags:    

Similar News