செய்திகள்
கோப்பு படம்.

திருவாரூர் மாவட்டத்தில் ஒரே நாளில் ரூ.6 கோடியே 15 லட்சத்துக்கு மது விற்பனை

Published On 2021-01-16 09:32 GMT   |   Update On 2021-01-16 09:32 GMT
பொங்கல் பண்டிகையையொட்டி திருவாரூர் மாவட்டத்தில் ஒரே நாளில் ரூ.6 கோடியே 15 லட்சத்துக்கு மது விற்பனை நடந்துள்ளது.
திருவாரூர்:

திருவாரூர் மாவட்டத்தில் 108 டாஸ்மாக் மதுக்கடைகள் உள்ளன. புத்தாண்டு, பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் மது விற்பனை அதிகரிப்பது வழக்கம்.

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை, மாட்டு பொங்கல் பண்டிகை விழாக்கள் என்றும் கோலாகலமாக கொண்டாடுவது வழங்கம். அதன்படி இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை மதுப்பிரியர்கள் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடினர்.

திருவள்ளுவர் தினம் (நேற்று) டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டததால் 2 நாட்கள் விழாவை கொண்டாடும் நோக்கத்துடன் மதுபிரியர்கள் முன்கூட்டியே பொங்கல் பண்டிகையன்று மது பாட்டில்கல்களை வாங்கி குவித்தனர்.

இதன் காரணமாக டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை அதிகரித்தது. ஒரே நாளில் ரூ.6 கோடியே 15 லட்சம் மதிப்பிலான பீர் மற்றும் மது வகைகள் விற்பனையானது. இது சராசரி விற்பனையை விட 3 மடங்கு அதிகமாகும்.
Tags:    

Similar News