செய்திகள்
கொரோனா பரிசோதனை (கோப்புப்படம்)

சென்னையில் 180 பேருக்கு புதிதாக கொரோனா- மாவட்ட வாரியாக பாதிப்பு நிலவரம்

Published On 2021-01-15 13:34 GMT   |   Update On 2021-01-15 13:34 GMT
தமிழகத்தில் இன்று 621 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாவட்ட வாரியாக பாதிப்பு நிலவரத்தை காண்போம்.
சென்னை:

தமிழகத்தில் இன்று புதிதாக 621 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 8 லட்சத்து 29 ஆயிரத்து 573 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களில் 6 ஆயிரத்து 299 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வைரஸ் பாதிப்பில் இருந்து இன்று 805 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால்  தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 8 லட்சத்து 11 ஆயிரத்து 023 ஆக அதிகரித்துள்ளது.

ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு இன்று 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு இதுவரை பலியானோர் எண்ணிக்கை 12 ஆயிரத்து 251 ஆக அதிகரித்துள்ளது.

மாவட்ட வாரியாக இன்று புதிதாக கொரோனா பரவியவர்களின் எண்ணிக்கை:-

அரியலூர் - 0
செங்கல்பட்டு - 25
சென்னை - 180
கோவை - 67
கடலூர் - 14
தர்மபுரி - 6
திண்டுக்கல் - 10
ஈரோடு - 16
கள்ளக்குறிச்சி - 4
காஞ்சிபுரம் - 22
கன்னியாகுமரி - 10
கரூர் - 10
கிருஷ்ணகிரி - 7
மதுரை - 14
நாகை - 5
நாமக்கல் - 12
நீலகிரி - 5
பெரம்பலூர் - 1
புதுக்கோட்டை - 5
ராமநாதபுரம் - 3
ராணிப்பேட்டை - 4
சேலம் - 24
சிவகங்கை - 4
தென்காசி - 4
தஞ்சாவூர் - 27
தேனி - 7
திருப்பத்தூர் - 4
திருவள்ளூர் - 22
திருவண்ணாமலை - 10
திருவாரூர் - 7
தூத்துக்குடி - 7
திருநெல்வேலி - 7
திருப்பூர் - 27
திருச்சி - 20
வேலூர் - 17
விழுப்புரம் - 5
விருதுநகர் - 9

மொத்தம் - 621
Tags:    

Similar News