செய்திகள்
ஞானதேசிகன் மறைவு- மு.க.ஸ்டாலின் இரங்கல்
தமிழ் மாநில காங்கிரஸ் துணைத்தலைவர் ஞானதேசிகன் மறைவுக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
சென்னை:
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவரும், மூத்த தலைவருமான ஞானதேசிகன் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார்.
ஞானதேசிகன் மறைவுக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் கூறியதாவது:-
த.மா.கா துணை தலைவரும் கலைஞரின் நெருங்கிய நண்பருமான ஞானதேசிகன் அவர்கள் மறைவெய்தியதை அறிந்து மிகுந்த மனவேதனைக்குள்ளானேன்.
இந்திய, தமிழக அரசியலில் பெரும்பங்காற்றிய அவர் நம் நெஞ்சங்களில் என்றும் நீங்கா இடம் கொண்டவர். அவரை பிரிந்து வாடும் உற்றார் உறவினருக்கு என் ஆழ்ந்த இரங்கல்கள்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவரும், மூத்த தலைவருமான ஞானதேசிகன் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார்.
ஞானதேசிகன் மறைவுக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் கூறியதாவது:-
த.மா.கா துணை தலைவரும் கலைஞரின் நெருங்கிய நண்பருமான ஞானதேசிகன் அவர்கள் மறைவெய்தியதை அறிந்து மிகுந்த மனவேதனைக்குள்ளானேன்.
இந்திய, தமிழக அரசியலில் பெரும்பங்காற்றிய அவர் நம் நெஞ்சங்களில் என்றும் நீங்கா இடம் கொண்டவர். அவரை பிரிந்து வாடும் உற்றார் உறவினருக்கு என் ஆழ்ந்த இரங்கல்கள்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.