செய்திகள்
5.56 லட்சம் கொரோனா தடுப்பு மருந்து இன்று தமிழகம் வருகிறது- சுகாதாரத்துறை செயலாளர் தகவல்
புனேவில் இருந்து தமிழகத்திற்கு முதல் கட்டமாக 5,56,500 கொரோனா தடுப்பூசி டோஸ்கள் அனுப்பப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னை:
தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்திற்கு முதல் கட்டமாக 5,56,500 கொரோனா தடுப்பூசி டோஸ்கள் அனுப்பப்பட்டுள்ளன.
புனேவிலிருந்து அனுப்பப்பட்ட கொரோனா தடுப்பு மருந்து காலை 10.30 மணியளவில் சென்னை விமான நிலையம் வருகிறது. சென்னை விமான நிலையத்தில் இருந்து 10 மையங்களுக்கு கொரோனா தடுப்பு மருந்து அனுப்பப்படும்.
மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோருக்கு முதலில் தடுப்பூசி செலுத்தப்படும். தடுப்பூசி போட்டுக்கொள்வது கட்டாயம் அல்ல, தாங்களாக முன்வருபவர்களுக்கே தடுப்பூசி போடப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்திற்கு முதல் கட்டமாக 5,56,500 கொரோனா தடுப்பூசி டோஸ்கள் அனுப்பப்பட்டுள்ளன.
புனேவிலிருந்து அனுப்பப்பட்ட கொரோனா தடுப்பு மருந்து காலை 10.30 மணியளவில் சென்னை விமான நிலையம் வருகிறது. சென்னை விமான நிலையத்தில் இருந்து 10 மையங்களுக்கு கொரோனா தடுப்பு மருந்து அனுப்பப்படும்.
மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோருக்கு முதலில் தடுப்பூசி செலுத்தப்படும். தடுப்பூசி போட்டுக்கொள்வது கட்டாயம் அல்ல, தாங்களாக முன்வருபவர்களுக்கே தடுப்பூசி போடப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.