செய்திகள்
குஷ்பு

பா.ஜனதா- அ.தி.மு.க. இடையே கருத்து வேறுபாடு இல்லை- குஷ்பு

Published On 2021-01-11 04:41 GMT   |   Update On 2021-01-11 04:41 GMT
பாஜக மற்றும் அ.தி.மு.க. இடையே கருத்து வேறுபாடு இல்லை என்று குஷ்பு கூறியுள்ளார்.
திருவையாறு:

தஞ்சை மாவட்டம் திருவையாறு தேரடி திடலில் பா.ஜனதா சார்பில் பொங்கல் விழா நடைபெற்றது. விழாவில் பா.ஜனதா கட்சியை சேர்ந்த நடிகை குஷ்பு கலந்து கொண்டார். பின்னர் அவர் திருவையாறு ஐயாறப்பர் கோவிலிலில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நாட்டில் மிகப்பெரிய கட்சியாக பா.ஜனதா உள்ளது. எங்கள் கட்சிக்கு விதிமுறைகள் உள்ளது. தமிழகத்தில் மிகப்பெரிய கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளோம்.

பா.ஜனதா- அ.தி.மு.க. இடையே எந்த கருத்து வேறுபாடும் இல்லை. கடுமையான சட்டம் இயற்றும் வரை பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடரும். மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்ட மசோதாவை சரியாக படித்து பார்த்தால் இது விவசாயிகளுக்கு சாதகமான மசோதா என புரியும்.

இவ்வாறு குஷ்பு கூறினார்.
Tags:    

Similar News