செய்திகள்
அமைச்சர் உதயகுமார்

ஜல்லிக்கட்டு போட்டி வீரர்களுக்கு முககவசம் கட்டாயம்- அமைச்சர் உதயகுமார்

Published On 2021-01-10 04:56 GMT   |   Update On 2021-01-10 04:56 GMT
ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
மதுரை:

தமிழக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

* ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும்.

* அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை முதல்வர், துணை முதல்வர் தொடங்கி வைப்பார்கள்.

* அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் சிறந்த மாடுபிடி வீரருக்கு, கார் பரிசாக வழங்கப்படும்.

* அலங்காநல்லூர் 655, பாலமேடு 651, அவனியாபுரம் 430 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்

* எந்த மாதம் பிறந்தாலும் திமுகவுக்கு வழியே பிறக்காது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News