செய்திகள்
நாகை அருகே பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை- டாக்டர் ராமதாஸ் கண்டனம்
நாகை அருகே கோவிலில் வைத்து பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்திற்கு டாக்டர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
நாகை மாவட்டம், நாகூர் நாகத்தோப்பு என்ற இடத்தில் கூலி வேலைக்கு சென்று திரும்பிய பெண்ணை 2 இளைஞர்கள் கோவிலுக்குள் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக வெளியாகியுள்ள செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
மனித நேயமற்ற மிருகத்தனமான இந்த செயலை செய்த மனித மிருகங்கள் மிகக்கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். அவர்களுக்கு துணை போனவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தரமான சிகிச்சை வழங்க வேண்டும்.
பாலியல் வன்கொடுமைகளை தடுப்பதற்காக 2013-ஆம் ஆண்டில் ஜெயலலிதா அறிவித்த 13 அம்சத் திட்டத்தை முழுமையாக செயல்படுத்த வேண்டும். அதன் மூலம் பெண்கள் பாதுகாப்பாக நடமாடுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.