செய்திகள்
குடிநீர் தட்டுப்பாடு

பெரம்பலூரில் குடிநீர் வழங்காததால் காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்

Published On 2021-01-06 13:44 GMT   |   Update On 2021-01-06 13:44 GMT
பெரம்பலூரில் குடிநீர் வழங்காததால் காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பெரம்பலூர்:

பெரம்பலூர் நகராட்சி பகுதியில் பல இடங்களில் ஒரு வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட அரசு தலைமை மருத்துவமனை அருகே உள்ள எம்.ஜி.ஆர். நகரில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில், கடந்த இரு வாரத்திற்கு மேலாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இது குறித்து நகராட்சி அலுவலர்களிடம், அப்பகுதி மக்கள் பலமுறை புகார் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் குடிநீர் வினியோகிக்க நகராட்சி நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பொதுமக்கள் தரப்பில் கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட அப்பகுதி பெண்கள், குடிநீர் வழங்காததால் ஆத்திரம் அடைந்து நேற்று காலை எம்.ஜி.ஆர். நகர் அருகே பெரம்பலூர்- துறையூர் சாலையில் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார் மற்றும் நகராட்சி அலுவலர்கள் மறியல் நடந்த இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள், மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உடனடியாக குடிநீர் வழங்க ஏற்பாடு செய்வதாக கூறினர். இதில், உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, பெண்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியல் காரணமாக பெரம்பலூர்- துறையூர் சாலையில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Tags:    

Similar News