செய்திகள்
சென்னை தியாகராயநகர் பஸ் நிலையத்தில் குளம் போல் தண்ணீர் தேங்கி கிடப்பதை காணலாம்

சென்னையில் 105 ஆண்டுகளுக்கு பிறகு ஜனவரியில் பெய்த அதிக மழை

Published On 2021-01-06 01:47 GMT   |   Update On 2021-01-06 01:47 GMT
கடந்த 1915-ம் ஆண்டுக்கு பிறகு, ஜனவரி மாதத்தில் நேற்று அதிகளவு மழை பெய்து இருக்கிறது என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
சென்னை:

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று திடீரென்று மழை வெளுத்து வாங்கியது. பல இடங்களில் கனமழையும் கொட்டியது.
வடகிழக்கு பருவமழை காலம் நிறைவு பெற்று இருந்தாலும், பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. அந்தவகையில் ஜனவரி மாதம் 12-ந்தேதி வரை மழை தொடரும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் இதுவரை ஜனவரி மாதத்தில் பெய்த மழை அளவில் நேற்று பெய்த மழைதான் அதிகம் என்று கூறப்படுகிறது.



கடந்த 1915-ம் ஆண்டுக்கு பிறகு, ஜனவரி மாதத்தில் நேற்று அதிகளவு மழை பெய்து இருக்கிறது என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். அதன்படி, 105 ஆண்டுகளுக்கு பின் சென்னையில் அதிக அளவு மழை பதிவாகி உள்ளது.
Tags:    

Similar News