செய்திகள்
கோப்புபடம்

தமிழகத்தில் வேலையின்மை கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அரை சதவீதமாக குறைந்துள்ளது - முதல்வர் பெருமிதம்

Published On 2021-01-05 13:00 GMT   |   Update On 2021-01-05 13:00 GMT
தமிழகத்தில் வேலையின்மை விகிதம் கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அரை சதவீதமாகக் குறைந்துள்ளதாக இந்திய பொருளாதாரத்தை கண்காணிக்கும் மையம் என்ற நிறுவனம் தெரிவித்துள்ளது.
சென்னை

இந்திய பொருளாதாரத்தை கண்காணிக்கும் மையம்  வெளியிட்டு உள்ள தகவலில் 

தேசிய அளவில் நவம்பரில் 6.5 சதவீதமாக இருந்த வேலையின்மை விகிதம், டிசம்பரில் 9.1 சதவீதமாக உயர்ந்துள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை, ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்தியதற்கேற்ப வேலையின்மை விகிதம் குறைந்து வந்துள்ளது.

முழுஊரடங்கு அமலில் இருந்த ஏப்ரலில் வேலையின்மை விகிதம் 49.8 சதவீதமாக இருந்து, ஜூலையில் 8.1 சதவீதமாகக் குறைந்துள்ளது.

செப்டம்பரில் 5 சதவீதமாகவும், அக்டோபரில் 2.2 சதவீதமாகவும், நவம்பரில் 1.1 சதவீதமாகவும் வேலையின்மை விகிதம் குறைந்ததாக புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேளாண்மை, தொழில்துறை, சேவைத்துறைகளின் பங்களிப்பு காரணமாக வேலையின்மை விகிதம் குறைந்ததாக ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் பெரிய உற்பத்தி மாநிலங்களில், குஜராத்தின் வேலையின்மை விகிதம் 3.9% இலிருந்து 3% ஆகவும், மராட்டிய மாநிலத்தின்  விகிதம் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களுக்கு இடையில் 3.1% இலிருந்து 3.9% ஆகவும் உயர்ந்தது. ஒரு குறிப்பிட்ட மாதத்தில் சம்பளம் அல்லது கூலி சம்பாதித்த எவரும் வேலைவாய்ப்பாக கருதப்படுகிறார்கள்.

இது குறித்து தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:–

அடுக்கடுக்கான தமிழக அரசின் முயற்சிகள், அடுத்தடுத்து மேற்கொள்ளும் முதலீட்டு ஒப்பந்தங்கள், முடுக்கி விடப்பட்ட தொழில்சூழல், செழித்து நிற்கும் விவசாயம் விளைவாக, 5 ஆண்டுகளில் மிகக்குறைந்த வேலையின்மை விகிதம் 0.5 சதவீதம் மக்களின் மகிழ்ச்சியோடு வெற்றிநடைபோடும் தமிழகம்.
Tags:    

Similar News