செய்திகள்
விபத்து

லாரி மீது கார் மோதல்- முதியவர் பலி

Published On 2021-01-03 09:16 GMT   |   Update On 2021-01-03 09:16 GMT
பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் முதியவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
மங்களமேடு:

மதுரை மாவட்டம் வில்லாங்குடியை சேர்ந்தவர்கள் சீனுசாமி(வயது 60), பவுன்ராஜ்(65), சின்னசாமி(51), குமார்(68). இவர்கள் 4 பேரும் மதுரையில் இருந்து சென்னைக்கு காரில் சென்று கொண்டிருந்தனர்.

பெரம்பலூர் மாவட்டம் மங்களமேட்டை அடுத்த வாலிகண்டபுரம் அருகே உள்ள தம்பை குறுக்குச்சாலையில் சென்றபோது, அந்த வழியாக வந்த டிப்பர் லாரி மீது கார் வேகமாக மோதியது. இதில் காரில் இருந்த சீனுசாமி பலத்த காயமடைந்து, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மற்ற 3 பேரும் காயமடைந்தனர்.

இது குறித்து தகவல் அறிந்து வந்த மங்களமேடு போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:    

Similar News