செய்திகள்
மாயம்

கரூர் அருகே கல்லூரி மாணவி மாயம்

Published On 2021-01-01 13:16 GMT   |   Update On 2021-01-01 13:16 GMT
கரூர் அருகே கல்லூரி மாணவி மாயமானது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் அவரை தேடி வருகிறார்கள்.
கரூர்:

கரூர் அருகே உள்ள பசுபதிபாளையம் பகுதியை சேர்ந்தவர் பவித்ரா (வயது 17). இவர் நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் உள்ள ஒரு கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்துள்ளார். 

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்து வந்த பவித்ரா மாயமானார். இதையடுத்து பவித்ராவை அவரது பெற்றோர்கள் உறவினர் வீடு மற்றும் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. 

இதுகுறித்து பசுபதிபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து, மாயமான பவித்ராவை தேடி வருகிறார்.

Tags:    

Similar News