செய்திகள்
கோப்பு படம்.

ஓமலூர் போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்

Published On 2021-01-01 12:56 GMT   |   Update On 2021-01-01 12:56 GMT
ஓமலூர் போலீஸ் நிலையத்தில் 2-வதாக திருமணம் செய்த காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர்.
ஓமலூர்:

ஓமலூரை அடுத்த முத்துநாயக்கன்பட்டி ஊராட்சி கரினல்பட்டி பகுதியை சேர்ந்தவர் தினேஷ்குமார் (வயது 21). இவர் டிப்ளமோ படித்துவிட்டு அழகுநிலையம் நடத்தி வருகிறார். இவரும், முத்துநாயக்கன்பட்டியை சேர்ந்த மாரிமுத்து மகள் திலகவதி (19) என்பவரும் முகநூலில் அறிமுகம் ஆகி உள்ளனர். பின்னர் பார்க்காமலேயே ஒரு வருடம் காதலித்து வந்து உள்ளனர். தொடர்ந்து முகவரியை கேட்டு தெரிந்தபின் ஒரே ஊராட்சியில் வசித்து வருவது தெரிய வந்தது. 

இதையடுத்து கடந்த ஆண்டு வீட்டை விட்டு சென்று காதல்ஜோடி திருமணம் செய்துகொண்டனர். இதையடுத்து திலகவதியின் பெற்றோர் தங்களது மகளை கடத்தி சென்றுவிட்டதாக ஓமலூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தனர். 

இதன்பேரில் அப்போது திலகவதி மைனர் பெண் என்பதால், தினேஷ்குமார் போக்‌சோவில் கைது செய்யப்பட்டார். பின்னர் சிறையில் இருந்து வெளியில் வந்த தினேஷ்குமார், திலகவதிக்கு திருமண வயது வந்ததும், அவரை அழைத்துச்சென்று 2-வது முறையாக திருமணம் செய்துகொண்டு ஓமலூர் போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தார். போலீசார் இரு தரப்பு பெற்றோரையும் அழைத்து பேசி திலகவதியை, அவரது கணவருடன் அனுப்பி வைத்தனர்.
Tags:    

Similar News