செய்திகள்
விபத்து

மங்களமேடு அருகே விளம்பர பதாகை மீது கார் மோதி ஒருவர் பலி

Published On 2021-01-01 09:15 GMT   |   Update On 2021-01-01 09:15 GMT
பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு அருகே விளம்பர பதாகை மீது கார் மோதிய விபத்தில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
மங்களமேடு:

சென்னையை சேர்ந்த சிலர் சுற்றுலாவிற்காக கொடைக்கானல் சென்று விட்டு மீண்டும் சென்னைக்கு காரில் சென்று கொண்டிருந்தனர். பெரம்பலூர் மாவட்டம் மங்களமேட்டை அடுத்த திருமாந்துறை சுங்கச்சாவடி அருகே சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் இருந்த விளம்பர பதாகையின் மீது மோதியது. இதில் காரில் பயணித்த வேளச்சேரி அரசு குடியிருப்பை சேர்ந்த கோவிந்தராஜ்(வயது 51) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மேலும் சென்னை கும்மிடிப்பூண்டியை சேர்ந்த வினோத் மகன் சந்தோஷ்(32), புவனகிரி(40), சென்னை அய்யப்பா நகரை சேர்ந்த பாலகுமார் மகன் ஹரிஷ்குமார்(32), சென்னை மாங்காடு பகுதியை சேர்ந்த யுவராஜ் மகன் அய்யப்பா(32) மற்றும் கார் டிரைவர் காரைக்கால் நடேசபுரம் பகுதியை சேர்ந்த ரபீக் மகன் நபீஸ் (26) ஆகியோர் காயமடைந்தனர். இது குறித்து மங்களமேடு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:    

Similar News