செய்திகள்
கோப்பு படம்.

திருப்பத்தூர் பகுதியில் 2-ந் தேதி மின் நிறுத்தம்

Published On 2020-12-31 13:17 GMT   |   Update On 2020-12-31 13:17 GMT
திருப்பத்தூர் பகுதியில் 2-ந் தேதி பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
திருப்பத்தூர்:

திருப்பத்தூர் மின் பகிர்மான வட்டம் திருப்பத்தூர் கோட்டத்தை சேர்ந்த திருப்பத்தூர், கொரட்டி, கந்திலி, திருப்பத்தூர், குரிசிலாப்பட்டு, வெலக்கல்நத்தம் ஆகிய துணை மின் நிலையங்களில் அத்தியாவசிய மின் சாதன பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் வருகிற 2-ந் தேதி (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சி. ஆசிரமம், பொம்மிகுப்பம், திருப்பத்தூர் டவுன், கொரட்டி, சுந்தரம்பள்ளி, பேராம்பட்டு,

வேப்பல்நத்தம், நந்திபெண்டா, கொத்தாலக்கொட்டாய், காலேஜ் நகர், ஆசிரியர் நகர், திரியாலம், பாச்சல், அச்சமங்கலம், ஆண்டியப்பனூர், குரிசிலாப்பட்டு, மூலக்காடு, ஜவ்வாது மலையில் உள்ள புதூர் நாடு, புங்கம்பட்டு நாடு மற்றும் நெல்லிவாசல் நாடு, ஜெயபுரம், சந்திரபுரம், வேம்பல்நத்தம், பையனப்பள்ளி வெலக்கல் நத்தம், குனிச்சூர், முகமதாபுரம், செட்டேரி டேம், சுண்ணாம்பு குட்டை, நல்லம்பள்ளி, ஏரியூர், அன்னசாகரம் உள்ளிட்ட பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும்.

மேற்கண்ட தகவலை திருப்பத்தூர் மின்பகிர்மான வட்ட செயற்பொறியாளர் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News