செய்திகள்
பொதுக்கூட்ட மேடையில் அமர்ந்திருக்கும் தலைவர்கள்

பிரமாண்ட பொதுக்கூட்டத்துடன் அதிமுக தேர்தல் பிரசாரம் தொடங்கியது -ஓபிஎஸ், ஈபிஎஸ் பங்கேற்பு

Published On 2020-12-27 05:19 GMT   |   Update On 2020-12-27 05:44 GMT
தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், சென்னையில் பிரமாண்ட பொதுக்கூட்டத்துடன் அதிமுக தேர்தல் பிரசாரம் தொடங்கியது
சென்னை:

தமிழக சட்டசபைக்கு வருகிற ஏப்ரல் மாதம் பொதுத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் தலைவர்கள் பிரச்சாரத்தை தொடங்கி உள்ளனர். ஆளுங்கட்சியான அ.தி.மு.க. சார்பிலும் தேர்தல் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.  அ.தி.மு.க.வின் முதல்- அமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி முன்னிறுத்தப்பட்டுள்ளதால், அ.தி.மு.க. தொண்டர்கள், நிர்வாகிகள் தீவிரமாக தேர்தல் பணியாற்ற தொடங்கி விட்டனர்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது சொந்த தொகுதியான எடப்பாடியில் கடந்த வாரம் பெருமாள் கோவிலில் சாமி கும்பிட்டுவிட்டு தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார்.



இதன் அடுத்தக்கட்டமாக எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் இணைந்து அதிமுகவின் தேர்தல் பிரசாரத்தை தொடங்கி வைக்கும் கூட்டம் சென்னையில் இன்று காலையில் தொடங்கியது. 

சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்ற இந்த பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர்ஓ.பன்னீர்செல்வம் இருவரும் பங்கேற்று பிரசார பணிகளை துவக்கி வைக்கின்றனர்.



இந்த பொதுக்கூட்டத்தில் அதிமுக தலைமைக்கழக நிர்வாகிகள், வழிகாட்டுக்குழு உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள், அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், முக்கிய நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் பங்கேற்றுள்ளனர்.
Tags:    

Similar News