செய்திகள்
சென்னை வானிலை ஆய்வு மையம்

அடுத்து வரும் 4 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும்- வானிலை ஆய்வு மையம்

Published On 2020-12-24 08:16 GMT   |   Update On 2020-12-24 08:16 GMT
தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அடுத்து வரும் 4 நாட்களுக்கு பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை:

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அடுத்து வரும் 4 நாட்களுக்கு பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

28.12.2020 அன்று தென் கடலோர மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசான மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையும் நிலவும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 24 நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ், குறைந்த பட்ச வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ், குறைந்த பட்ச வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

இன்று மற்றும் நாளை தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழை பெய்த விவரம்(சென்டிமீட்டரில்) சின்னக்கல்லார் (கோவை) 4, வால்பாறை (கோவை) 3, சின்கோனா (கோவை) 2, சோலையார் (கோவை), சித்தார் (கன்னியாகுமரி) 1.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News