செய்திகள்
பருத்தி ஏலம்

ராசிபுரத்தில் ரூ.68 லட்சத்திற்கு பருத்தி ஏலம்

Published On 2020-12-22 10:30 GMT   |   Update On 2020-12-22 10:30 GMT
ராசிபுரத்தில் 3,271 பருத்தி மூட்டைகள் ரூ.68 லட்சத்திற்கு ஏலம் போனதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ராசிபுரம்:

ராசிபுரம் அருகே கவுண்டம்பாளையம் பவர் ஹவுஸ் பின்புறம் உள்ள ஆர்.சி.எம்.எஸ். சங்க வளாகத்தில் ராசிபுரம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனை சங்கம் சார்பில் பருத்தி ஏலம் நேற்று நடந்தது. இந்த ஏலத்தில் கவுண்டம்பாளையம், சந்திரசேகரபுரம், அணைப்பாளையம், முருங்கபட்டி, நாட்டாமங்கலம், வெண்ணந்தூர், சவுதாபுரம், வையப்பமலை, பட்டணம், மின்னக்கல், ப.மு.பாளையம், தேங்கல் பாளையம், முத்துக்காளிப்பட்டி உள்பட பல்வேறு கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.

திருப்பூர், ஆத்தூர், அவினாசி, மகுடஞ்சாவடி, கொங்கணாபுரம் உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் ஏலத்தில் கலந்து கொண்டு பருத்தியை ஏலத்தில் எடுத்தனர். இதில் ஆர்.சி.எச். ரக பருத்தி 3,261 மூட்டைகளையும், டி.சி.எச். ரக பருத்தி 10 மூட்டைகளையும் ஏலத்திற்கு விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர்.

இதில் ஆர்.சி.எச். ரக பருத்தி குறைந்தபட்சம் ஒரு குவிண்டால் ரூ.54.60 முதல் அதிகபட்சமாக ஒரு குவிண்டால் ரூ.63.99-க்கும், டி.சி.எச். ரக பருத்தி ஒரு குவிண்டால் குறைந்தபட்சம் ரூ.6,889 முதல் அதிகபட்சமாக குவிண்டால் ரூ.6,939-க்கும் விற்பனை ஆனது. மொத்தம் 3,271 பருத்தி மூட்டைகள் ரூ.68 லட்சத்திற்கு ஏலம் போனதாக அதிகாரிகள் தெரிவித்தனர்..
Tags:    

Similar News