செய்திகள்
கோப்புப்படம்

சூலூர் அருகே ஷட்டரை உடைத்து செல்போன் கடையில் திருட்டு

Published On 2020-12-22 02:49 GMT   |   Update On 2020-12-22 02:49 GMT
சூலூர் அருகே ஷட்டரை உடைத்து கடையில் இருந்த சுமார் 60 ஆயிரம் மதிப்புள்ள செல்போன்கள் திருடு போயின
சூலூர்:

சூலூர் அடுத்த கண்ணம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (43).அப்பகுதியில் உள்ள தனியார் கல்லூரி அருகே செல்போன் கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டு சென்ற அவர் நேற்று காலை கடைக்கு சென்று பார்த்தபோது செல்போன் கடையின் ஷட்டர் உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது சுமார் 60 ஆயிரம் மதிப்புள்ள செல்போன்கள் திருடு போயிருப்பது அவருக்கு தெரியவந்தது. தொடர்ந்து இது குறித்து ரமேஷ் சூலூர் போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் அப்பகுதி உள்ள சி.சி.டி.வி கேமராக்களை ஆய்வு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News