செய்திகள்
ராமேசுவரத்தில் 6-வது நாளாக வேலைநிறுத்தம்
மத்திய, மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இன்று மீனவர்கள் ராமேசுவரம் பஸ் நிலையம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ராமேசுவரம்:
கடந்த 14-ந்தேதி கச்சத்தீவு அருகே மீன் பிடித்த ராமேசுவரம் மீனவர்கள் 29 பேரை இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி வந்ததாக கூறி கைது செய் தனர். அவர்களது படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த நிலையில் கைது செய்யப்பட்ட மீனவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தாமல் கொரோனா அச்சம் காரணமாக அவர்களது விசைப்படகுகளிலேயே இலங்கை கடற்படை தனிமைப்படுத்தி விட்டது.
இந்த நிலையை கண்டித்தும், சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை மீட்க மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தியும் ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் கடந்த 5 நாட்களாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இன்று 6-வது நாளாக அவர்களது போராட்டம் நீடித்தது. இதற்கிடையில் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்காத மத்திய, மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இன்று மீனவர்கள் ராமேசுவரம் பஸ் நிலையம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதில் ஏராளமான மீனவர்கள் திரளாக கலந்து கொண்டனர். மேலும் சிறை பிடிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினரும் இதில் பங்கேற்றனர்.
6 நாட்களாக மீனவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் அவர்கள் மூன்று கடல் மீன் பிடிக்க செல்லவில்லை. இதனால் ரூ.1¼ கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையில் மீனவர்களின் வேலைநிறுத்தம் காரணமாக மீன்களுக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது. அவற்றின் விலையும் அதிகரித்துள்ளது.
கடந்த 14-ந்தேதி கச்சத்தீவு அருகே மீன் பிடித்த ராமேசுவரம் மீனவர்கள் 29 பேரை இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி வந்ததாக கூறி கைது செய் தனர். அவர்களது படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த நிலையில் கைது செய்யப்பட்ட மீனவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தாமல் கொரோனா அச்சம் காரணமாக அவர்களது விசைப்படகுகளிலேயே இலங்கை கடற்படை தனிமைப்படுத்தி விட்டது.
இந்த நிலையை கண்டித்தும், சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை மீட்க மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தியும் ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் கடந்த 5 நாட்களாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இன்று 6-வது நாளாக அவர்களது போராட்டம் நீடித்தது. இதற்கிடையில் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்காத மத்திய, மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இன்று மீனவர்கள் ராமேசுவரம் பஸ் நிலையம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதில் ஏராளமான மீனவர்கள் திரளாக கலந்து கொண்டனர். மேலும் சிறை பிடிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினரும் இதில் பங்கேற்றனர்.
6 நாட்களாக மீனவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் அவர்கள் மூன்று கடல் மீன் பிடிக்க செல்லவில்லை. இதனால் ரூ.1¼ கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையில் மீனவர்களின் வேலைநிறுத்தம் காரணமாக மீன்களுக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது. அவற்றின் விலையும் அதிகரித்துள்ளது.