செய்திகள்
கோப்புபடம்

நெல்லையில் பெண் என்ஜினீயர் தீக்குளித்து தற்கொலை

Published On 2020-12-18 11:48 GMT   |   Update On 2020-12-18 11:48 GMT
நெல்லையில் பெண் என்ஜினீயர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை:

நெல்லையை அடுத்த தச்சநல்லூர் செல்வவிக்னேஸ்வரர் நகர் குறிஞ்சி முதலாவது தெருவைச் சேர்ந்தவர் ராஜி. இவருடைய மகள் சத்யா (வயது 28). என்ஜினீயரிங் பட்டதாரியான இவருக்கு படிப்புக்கு ஏற்ற சரியான வேலை கிடைக்கவில்லை.

இதனால் மனமுடைந்த சத்யா சம்பவத்தன்று வீட்டில் தனது உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதில் உடல் கருகிய அவரை பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரயில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் சத்யா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தச்சநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News