செய்திகள்
தற்கொலை

திருக்கோவிலூர் அருகே பெண் தீக்குளித்து தற்கொலை

Published On 2020-12-17 10:01 GMT   |   Update On 2020-12-17 10:01 GMT
திருக்கோவிலூர் அருகே கணவர் வேலைக்கு செல்லாததால் விரக்தி அடைந்த பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
திருக்கோவிலூர்:

திருக்கோவிலூர் அருகே உள்ள குலதீபமங்கலம் அய்யப்பன் நகர் பகுதியை சேர்ந்தவர் குமார் மனைவி மஞ்சுளா(வயது 45). குடிப்பழக்கத்துக்கு அடிமையான குமார் சரியாக வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். மஞ்சுளாவுக்கு ஏற்கனவே உடல் நலம் சரியில்லாததால் அவரால் வேலைக்கு செல்ல முடியாமல் வீட்டில் இருந்து வந்தார்.

இந்த நிலையில் தனது கணவர் குடிப்பழக்கத்துக்கு ஆளாகி வேலைக்கு செல்லாமல் இருந்ததால் மன விரக்தியில் இருந்து வந்த மஞ்சுளா வீட்டில் இருந்த மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். தீ வெப்பம் தாங்க முடியாமல் அவர் கத்தினார். இந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிச்சென்று மஞ்சுளாவின் உடலில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். பின்னர் அவரை சிகிச்சைக்காக திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மஞ்சுளா சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக இறந்தார். 

இது குறித்து மணலூர்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அகிலன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News