செய்திகள்
மொட்டை மாடி நடைபயிற்சிக்கு விடை கிடைத்தது- முதியோர் உற்சாகம்
சென்னை மெரினா கடற்கரை மீண்டும் திறக்கப்பட்டதால் நடைபயிற்சி செய்வோர், முதியோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னை:
சென்னை மெரினா கடற்கரை மீண்டும் திறக்கப்பட்டதால் நடைபயிற்சி செய்வோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். குறிப்பாக முதியோர் மீண்டும் குதூகலம் அடைந்துள்ளனர் என்றே சொல்லலாம்.
இதுகுறித்து மெரினாவுக்கு நடைபயிற்சி மேற்கொண்ட முதியோர் கூறியதாவது:-
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக மெரினா கடற்கரை மூடப்பட்டதால் நடைபயிற்சி மேற்கொள்ள முடியாமல் தவித்து வந்தோம். இதனால் வீட்டு மொட்டை மாடிகளிலேயே நடைபயிற்சி செய்து வந்தோம். என்னதான் வீடுகளிலேயே பயிற்சி மேற்கொண்டாலும், கடற்கரையில் காற்று வாங்க நடைபயிற்சி செய்வதே தனி சுகம் தான். தற்போது கடற்கரை மீண்டும் திறக்கப்பட்டது மகிழ்ச்சி ஏற்படுத்தியுள்ளது. இதனால் மொட்டை மாடி நடைபயிற்சிக்கும் விடை கிடைத்துள்ளது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
சென்னை மெரினா கடற்கரை மீண்டும் திறக்கப்பட்டதால் நடைபயிற்சி செய்வோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். குறிப்பாக முதியோர் மீண்டும் குதூகலம் அடைந்துள்ளனர் என்றே சொல்லலாம்.
இதுகுறித்து மெரினாவுக்கு நடைபயிற்சி மேற்கொண்ட முதியோர் கூறியதாவது:-
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக மெரினா கடற்கரை மூடப்பட்டதால் நடைபயிற்சி மேற்கொள்ள முடியாமல் தவித்து வந்தோம். இதனால் வீட்டு மொட்டை மாடிகளிலேயே நடைபயிற்சி செய்து வந்தோம். என்னதான் வீடுகளிலேயே பயிற்சி மேற்கொண்டாலும், கடற்கரையில் காற்று வாங்க நடைபயிற்சி செய்வதே தனி சுகம் தான். தற்போது கடற்கரை மீண்டும் திறக்கப்பட்டது மகிழ்ச்சி ஏற்படுத்தியுள்ளது. இதனால் மொட்டை மாடி நடைபயிற்சிக்கும் விடை கிடைத்துள்ளது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.