செய்திகள்
புழல் ஏரி

புழல் ஏரியில் இருந்து உபரிநீர் திறப்பு நிறுத்தம்

Published On 2020-12-09 03:17 GMT   |   Update On 2020-12-09 04:31 GMT
நீர்வரத்து குறைந்ததால் புழல் ஏரியில் இருந்து உபரிநீர் திறக்கப்படுவது நிறுத்தப்பட்டு உள்ளது.
செங்குன்றம்:

சென்னை மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றும் முக்கிய ஏரியான புழல் ஏரிக்கு, தொடர் மழை காரணமாக நீர் வரத்து அதிகரித்தது. இதனால் ஏரியின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது. புழல் ஏரியின் மொத்த உயரம் 21.2 அடி ஆகும். நீர்வரத்து அதிகரித்ததால் ஏரியின் நீர்மட்டம் 20 அடியை தாண்டியது.

இதையடுத்து கடந்த 4-ந் தேதி புழல் ஏரியில் இருந்து 1,000 கனஅடி நீர் திறக்கப்பட்டது. கடந்த 2 நாட்களாக பலத்த மழை இல்லாததால் ஏரிக்கு நீர்வரத்து குறைந்தது. நேற்று காலை நிலவரப்படி ஏரிக்கு 150 கன அடி தண்ணீர் மட்டுமே வந்தது.

இதையடுத்து புழல் ஏரியில் இருந்து உபரிநீர் திறக்கப்படுவது நிறுத்தப்பட்டு உள்ளது. ஏரியின் மொத்த கொள்ளளவு 3,300 மில்லியன் கன அடியாகும். தற்போது ஏரியில் 3,054 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது.
Tags:    

Similar News